திமிர்ந்த ஞானச் செருக்கு....
இடம்: ஸ்வல்பர்ட் , லோங்கியேர்ப்பியேன் ( Longyearbyen ) , மணி :இரவு 11.30 , நாள் :வியாழக் கிழமை அக்டோபர் 8,2020 என் பெயர் அஸ்வதி சுப்புராயன். நான் இப்பொழுது இருக்கும் இடம் வட துர்வதிற்க்கு மிக அருகில் இருக்கும் ஸ்வல்பர்ட் , லோங்கியேர்ப்பியேன் என்னும் ஊரில் , ஒரு சின்ன விருந்தினர் வீட்டில். ஒரு 5 நிமிடம் முன்னர் என் வாழ்வில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தால் என் உள்ளம், உடல் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இந்த விடியா பகலே முடியா இரவே என்று இருக்கும் இரவை கிழித்துக்கொண்டு டெலிபோன் மணி அடித்தது .போனை எடுத்தேன் நான் :ஹலோ ! ம்ம் சொல்லுங்கள் ஓ ! அப்படியா நான் சரோ,சாரி மிஸ்சஸ். சரோஜினி அரவிந்தத்திடம் இந்த நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன் . மறுமுனையில் இருந்து யாரோ எதோ சொல்ல. நான் அதற்கு , "ஆமாம் இங்கே பனி புயல் அடித்துக் கொண்டிருக்குது அதனால் அனைத்து தோலை தொடர்பு சாதனங்களும் பயனற்று போய்விட்டன, நான் பேசுவது அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட போன் லைன்.அதனால்தான் தங்களால் மிஸ்சஸ் சரோஜினியை தொடர்பு கொள்ள முடியவில்லை.நான் இந்த நல்ல விஷயத்தை அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.அ